அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்சே பகுதியில் இந்திய சீன எல்லையில் சமீபத்தில் 100-க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதனை அறிந்த இந்திய படையினர் தக்க பதிலடி கொடுத்து சீன வீரர்களை பின்வாங்க வைத்ததில் இரு தரப்பு வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது உலக அளவில் பேசு பொருளாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்க காங்கிரஸ் எம்.பி ராஜா கிருஷ்ணமூர்த்தி இந்தியாவிற்கு எதிரான சீனாவின் சமீபத்திய அத்துமீறலை பற்றி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியபோது, “சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆயுதப் படைகள் மூலமாக இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததன் மூலமாக சமீபத்திய ஆக்கிரமிப்பு சம்பவத்தை அறிந்து நான் வேதனை அடைந்துள்ளேன். இந்த சம்பவம் இந்திய படைகளுக்கு எந்த பெரிய உயிரிழப்பும் ஏற்படாததற்கு நான் நன்றி உள்ளவனாக இருந்தாலும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ந்து வரும் போர்வெற்றியை இந்தியா மற்றும் நமது பாதுகாப்பு கூட்டாளிகளுடன் அமெரிக்கா தொடர்ந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை இது நினைவுபடுத்துகிறது” என அவர் கூறியுள்ளார்.