Categories
மாநில செய்திகள்

வேற லெவல்ல இருக்கும் போலயே….? அடுத்த மாதம் 6,7,8 தேதிகளில் பிரம்மாண்டமான இலக்கிய திருவிழா…. எங்கு தெரியுமா….?

அடுத்த மாதம் 3 நாட்கள்  இலக்கியத் திருவிழா நடைபெறுகிறது.

நமது தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 4 இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என அறிவித்தது. அது  வைகை, காவேரி, பொருநை, சிறுவாணி ஆகிய நதிகளின் மரபு அடிப்படையில் நடத்தப்படுகிறது. தற்போது அடுத்த மாதம் 6-ஆம் தேதி முதல் 8-ஆம்  தேதி வரை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் திருவிழா நடத்தப்படும்.

இதில் இலக்கிய வாசகங்களுக்கான அரங்கமும், மாணவர்களை இலக்கியம்  நோக்கில் வழிநடத்தி செல்லும் வகையில் சிறந்த ஆளுமைகளின் உரையாடலுடன்  கூடிய தனி அரங்கமும், குழந்தைகளுக்கு கதை, பாடல் வழியாக நமது இலக்கிய உலகை திறந்து காட்டும் வகையில் சிறுவர் இலக்கிய அரங்கமும், சினிமாக்கள் கொண்ட காட்சி அரங்கமும் அமைக்கப்படுகிறது.

அதன் பின்னர் மாணவர்கள்  சார்பில்  பொம்மலாட்டம், நாடகம், மரபு சார் விளையாட்டுக்கள் நடைபெறும். மேலும் இது தவிர நூலக வளாகத்தில் அரிய பருவ இதழ்கள், நூல்கள், ஆவணங்கள், அரிய நாணயங்கள் உள்ளிட்ட படங்களும் இடம்பெறும் என அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |