காங்கோவில் பெய்து வரும் கனமழையால் 120 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கோ ஜனநாயக குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் வெள்ளம், கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக முழு பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, என் 1 சாலை 3- 4 நாட்களுக்கு மூடப்படலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் மற்றும் மிகப்பெரிய நிலச்சரிவு காரணமாக இதுவரை 120 பேர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இது குறித்து காங்கோவின் அரசாங்க செய்தி தொடர்பாளர் பேட்ரிக் முயாயாவால் ட்விட்டரில் வெளியிடப்பட்ட புகைபடங்களில் ஒரு சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டிருப்பதை காட்டுகிறது. மேலும் இந்த நகரம் மோசமான ஒழுங்குமுறைபடுத்தப்பட்ட விரிவான நகரமயமாக்கல் மற்றும் காலநிலை மாற்றத்தின் காரணமாக அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அதிக அளவில் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.