ஜனவரி 1-ம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கத்திற்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி வைகை – கொல்லம் விரைவு ரயில்கள் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி திருவிழா ஜனவரி 2-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் சென்னை- மதுரை- சென்னை வைகை விரைவு ரயில்கள் தென்காசி வழியாக இயக்கப்படும். கொல்லம்- சென்னை -கொல்லம் விரைவு ரயில் ஜனவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் சுமார் 2 நிமிஷங்கள் நின்று செல்லும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Categories
வைகுண்ட ஏகாதசி… ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல உத்தரவு… வெளியான தகவல்…!!!!!!
