அரசியலில் உதயநிதி ஒரு கத்துக்குட்டி என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலின் தனது கனவை நனவாக்கிக் கொண்டுள்ளார். குடும்ப கட்சியாக திமுக மாறிவிட்டது. திமுகவில் கட்சிக்காக உழைத்தவர்கள் பலர் உள்ளனர்.
ஆனால், உதயநிதியை அமைச்சராக்குவதில் அவ்வளவு தீவிரம் காட்டுகின்றனர் என்று அவர் கூறினார். உதயநிதி அமைச்சரான பிறகு தமிழகத்தில் எந்த ஒரு மாற்றமும் வரப்போவது கிடையாது. அறியா பிள்ளை விதைத்த பயிர் வீடு வந்து சேராது என்ற பழமொழி போல தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.