Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்… 18 அணு ஆயுத போர் விமானம்… பதற்றத்தால் மக்கள் அச்சம்…!!!!!

கடந்த 2016 -ஆம் வருடம் முதல் ஜனாதிபதியாக சாய்இங் -வென் தேர்வு செய்யப்பட்டதிலிருந்து சீனா – தைவான் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கான முக்கிய காரணங்களாக தைவான் – சீனாவின் ஒற்றையங்கம் என்ற பரப்புரைகளை ஜனாதிபதி சாய்இங் -வென் தொடர்ந்து மறுத்து வருவது மற்றும்  தைவானை சுதந்திர சுயாட்சி நாடாக அறிவித்து வருவதுமாகும். அது மட்டுமல்லாமல் சீனா- தைவான் மீதான ராணுவம், பொருளாதாரம் மற்றும் ராஜதந்திர அழுத்தங்களை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் தைவானில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் தைவானிய உணவு பானங்கள், மது மற்றும் மீன்பிடி பொருட்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளது. இதற்கு சாய்இங்- வென் சீனாவின் இந்த தடை சர்வதேச வர்த்தக விதிகளை மீறும் செயல். மேலும் தீவு நாட்டின் மீதான பாகுபாடு என குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் முதல் தைவான் -சீனா இடையேயான மோதல் போர்பதற்றமாக மாறி உள்ளது. இதனால் தைவான் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

மேலும் செப்டம்பர் மாதம் முதல் தைவான் பாதுகாப்பு எல்லைக்குள் நுழையும் சீன போர் விமானங்கள் மற்றும் கப்பல்கள் குறித்த தினசரி பாதுகாப்பு எச்சரிக்கை அறிக்கைகளை தைவான் சமூகத்திற்கு தைவான் அரசு வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. சீனா சுமார் 18 அணு  ஆயுத H-6 ரக விமானங்களை தைவான் பாதுகாப்பு எல்லைக்குள் அத்துமீறி அனுப்பியுள்ளது. இது குறித்து செவ்வாய்க்கிழமை தைவான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 24 மணி நேரத்தில் 21 விமானங்கள் தீவின் தென்மேற்கு வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தில் நுழைந்துள்ளது. இதில் 18 அணுசக்தி திறன் கொண்ட குண்டு வீச்சு விமானங்களும் அடங்கும் என கூறியுள்ளது.

Categories

Tech |