கடைகளில் ஒற்றை சிகரெட் விற்பது சட்டவிரோதம் என அறிவிக்கும் வகையில், புதிய சட்டத்தை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோய்க்கான முக்கிய காரணமாக புகைப்பழக்கம் உள்ளது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக கடைகளில் ஒற்றை சிகரெட் விற்பதை தடுக்க, சட்டம் கொண்டு வர நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. விரைவில் இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
பெட்டியாக இல்லாமல் ஒரே சிகரெட் மற்றும் கட்டப்படாத புகையிலை பொருட்கள் ஆகியவற்றை ஏழை மக்கள் மற்றும் இளைஞர்கள் எளிதாக வாங்கும் சூழல் நிலவுகிறது. மேலும் புகைபிடிப்பவர்களில் ஏராளமானவர்கள் முழு பெட்டியாக வாங்காமல் ஒற்றை சிகரட்டையே வாங்குகின்றனர். மேலும் இதனால் தான் பல இளைஞர்களுக்கு புகைபிடிக்கும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.