தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் கடந்த வாரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வங்க கடலில் கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் கரையை கடந்தது.
புயல் கரையைக் கடந்தாலும் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி , கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை இருந்தாலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் இன்று விடுமுறைக்கு வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.