தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் சூர்யா நந்தா மற்றும் பிதாமகன் போன்ற படங்களுக்கு பிறகு மீண்டும் பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடிக்க இருந்தார். இந்த படத்தின் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், திடீரென படத்தின் கதை நடிகர் சூர்யாவுக்கு செட்டாகாது எனக்கூறி பாலா அறிவித்தார். அதோடு நடிகர் சூர்யா படத்தில் இருந்து விலகப்போவதாகவும் பாலா அறிவித்தார்.
இதனையடுத்து நடிகர் சூர்யாவும், 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் விலகுவதாக அறிவித்தது. இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு வணங்கான் பட டிராப்பால் 10 கோடி ரூபாய் வரை நஷ்டமானதாக தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.