தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஷால். இவர் தற்போது நடித்துள்ள லத்தி திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் மார்க் ஆண்டனி மற்றும் துப்பறிவாளன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷால் சமீபத்திய பேட்டியில் ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார்.
அவர் நான், உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா ஆகியோர் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றோம். அங்கு நானும், கிருத்திகாவும் நடு ரோட்டில் சண்டை போட்டோம். எனக்கு கிருத்திகா சகோதரி போன்றவர். நாங்கள் இருவரும் சந்திக்கும்போதெல்லாம் நட்பு ரீதியாக பல சுவாரசியமான விஷயங்களை பேசுவோம் என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் விஷாலின் பேட்டி தற்போது வலை தளங்களில் வைரலாகி வருகிறது.