Categories
தேசிய செய்திகள்

உலகின்‌ சிறந்த ரயில்வே நிலையமாக மாற்றுவதற்கு ரூ. 7000 கோடி நிதி ஒதுக்கீடு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 8-வது தமிழக குழுவின் பிரதிநிதிகளுடன் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உரையாடினார். அப்போது இந்த பயணத்தின் போது தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை பிரதிநிதிகள் மத்திய அமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர்.

அதன் பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் விதமாக காசி மற்றும் தமிழகம் இடையே “காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரயில்” என்ற புதிய ரயில் சேவை தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்பிறகு வாரணாசியில் உள்ள ரயில்வே நிலையத்தை மத்திய அமைச்சர் பார்வையிட்டு இந்த ரயில் நிலையத்தை உலகத்திலேயே சிறந்த ரயில் நிலையங்களில் ஒன்றாக மாற்ற வேண்டும் என்று அறிவித்தார். இதற்காக சுமார் 7000 கோடி செலவிடப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல்வேறு தரப்பிலிருந்து பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |