Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழ் மொழி தான் முக்கியம்…. ”ஒழுங்கா தமிழுல வையுங்க”…. கடைகளுக்கு உத்தரவு …!!

கடைகளின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள் , நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.பெயர்ப்பலகை வைப்பது குறித்த சட்ட விதிகள் பின்பற்றப் படவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழிலாளர் ஆணையம் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளும் , வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணை  பின்பற்றப்படவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் , கடைகள் , நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் தமிழ் எழுத்துக்களில் முதன்மையாக இருக்க வேண்டும்,  மற்ற மொழிகள் பெயர்ப்பலகை உபயோகிக்கப்பட்டால் ஆங்கிலம் இரண்டாவது இடத்திலும் , மற்ற மொழிகள் மூன்றாவது இடத்திலும் இருக்க வேண்டும் என்றும் தற்போது அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |