நாடு முழுவதும் தினம் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகம் பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அவ்வகையில் தற்போது திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு சிறப்பு கட்டண அறையில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து டிசம்பர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளிலும் காலை 9:30 மணிக்கு திருச்சியை வந்தடையும்.
அதன் பிறகு திருச்சியில் இருந்து டிசம்பர் 25ஆம் தேதி மற்றும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1, 8, 15, 22, 29ஆகிய தேதிகளில் அதிகாலை 5:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9:15 மணிக்கு அகமதாபாத்திற்கு சிறப்பு கட்டண ரயில் சென்றடையும். இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், செங்கல்பட்டு, சென்னை எழும்பூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ஆகிய ரயில் நிலையங்களில் இன்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.