ஜார்கண்டில் முக்தி மோர்ச்சா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபல போஜ்புரி நடிகை அக்ஷரா சிங் கலந்து கொண்டார். இவர் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் உரையாற்றிய பிறகு நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது நடிகை அக்ஷராவிடம் சிலர் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்தனர்.
அதோடு நடிகை அக்ஷராவை கும்பலாக சேர்ந்து கூட்டத்தில் நெறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கிருந்த போலீசார் நடிகை அக்ஷராவை சுற்றி இருந்த நபர்களை தடியடி நடத்தி விரட்டினர். இதில் பலருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவத்தால் கோபம் அடைந்த நடிகை அக்ஷரா நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார்.