வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் காரைக்காலில் இருந்து 560 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 640 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையில் நாளை கரையை கடக்கிறது.
இந்த புயலின் காரணமாக மணிக்கு 65 கிலோ மீட்டர் முதல் 75 கிலோமீட்டர் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதன்பிறகு கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழையின் காரணமாக தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவள்ளூர், சென்னை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.