சூட்கேஸில் பெண்ணின் சடலம் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள பஞ்சாபி பாக் பகுதியில் நேற்று மாலை சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது. மேலும் அந்த சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்துள்ளனர். அதில் 30 வயதுடைய இளம் பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது.
இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இறந்த பெண் யார்? எப்படி இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.