Categories
அரசியல் தேசிய செய்திகள்

#Election Breaking: ஹர்திக் படேல் பின்னடைவு…. வெற்றி யாருக்கு…?

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – இமாச்சலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவுகின்றது.

பிற்பகலுக்குள் இரு மாநிலங்களிலும் யார் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற போகிறார் என்பது தெரியவரும். உபி, பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. முலாய் சிங்கம் மறைவால் நடைபெற்ற மொய்பூரி மக்களவைத் தொகுதியில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தற்போதைய நிலவரப்படி, குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு முன், காங்கிரஸில் இருந்து பாஜகவில் சேர்ந்த பட்டிதார் இனத் தலைவர் ஹர்திக் படேல் பின்னடைவை சந்தித்துள்ளார். இவர் அங்கிருக்கும் விராம்கம் தொகுதியில் போட்டியிட்டார். அதேபோல் சமூக செயற்பாட்டாளரும், காங்கிரஸில் இருந்து தற்போது பாஜகவுக்கு சென்றவருமான அல்பேஷ் தாக்கூரும் பின்னடைவில் உள்ளார். இவர் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டார்.

Categories

Tech |