நாசா அனுப்பிய ஓரியன் மின்கலம் மீண்டும் பூமிக்கு திரும்புகிறது.
அமெரிக்க நாட்டின் விண்வெளி நிறுவனமான நாசா பல ராக்கெட்டுகளை தயாரித்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. அதேபோல் தற்போது மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டம் ஆர்டெமிஸ் 1 என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் கேப் கேனவரல் ஏவுதளத்தில் 3 மனித மாதிரிகளுடன் ஓரியன் விண்கலத்தை சுமந்து கொண்டு எஸ்.எல். எஸ் ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.
இந்த ராக்கெட்டில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் சுமார் 9 மணி நேர பயணத்திற்குப் பிறகு 57 ஆயிரம் மயில் தொலைவிலிருந்து ஓரியன் விண்கலம் பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. மேலும் வருகின்ற 11-ஆம் தேதி விண்கலம் பூமிக்கு திரும்பும் என நாசா தெரிவித்துள்ளது.