டைரக்டர் பாலா இயக்கிய “வணங்கான்” திரைப்படத்தில் சூர்யா நடித்து வந்தார். முதற்கட்ட சூட்டிங் கன்னியாகுமரியில் நடந்து வந்த நிலையில், படப்பிடிப்பில் இருந்து சூர்யா திடீரென வெளியேறினார். இதன் காரணமாக பட வேலைகள் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக வணங்கான் படம் கைவிடப்பட்டுவிட்டதா? என பலரும் கேள்வியெழுப்பி வந்தனர்.
இந்நிலையில் வணங்கான் படப்பிடிப்பு பணிகள் தொடரும் என டைரக்டர் பாலா தெரிவித்திருக்கிறார். அதன்படி வணங்கான் படத்தில் அதர்வா நடிக்க வாய்ப்பு இருப்பதாக புது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதர்வாவிடம் தொடர்புகொண்டு இது தொடர்பாக பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முன்பே பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தில் அதர்வா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.