Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் வந்தது ரெட், ஆரஞ்சு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் எட்டாம் தேதி அதிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகி வரும் மாண்டஸ் புயல் காரணமாக வருகின்ற டிசம்பர் ஒன்பதாம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. புயலால் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பேரிடர் மீட்பு குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்தப் புயல் பத்தாம் தேதி சென்னை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Categories

Tech |