Categories
தேசிய செய்திகள்

காற்று மாசு எதிரொலி: இந்த ரக பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்க தடை…!!

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசுபாடு மோசமாகி அபாய அளவை எட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக நிலவி வந்ததை தவிர தற்போது காற்று மாசுபாடானது மிகவும் மோசமாகியுள்ளது. டெல்லியில் தற்போது காற்று தரக் குறியீடு 407 ஆக இருக்கிறது. இதனால் அதிகாலை நேரத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதோடு மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்படுகிறது.

இந்நிலையில் அதனை கட்டுப்படுத்த மத்திய நிபுணர் குழு புதிய செயல்திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி டெல்லியில் வரும் 9ம் தேதி வரை பிஎஸ் 3 மற்றும் பிஎஸ் 4 ரக பெட்ரோல், டீசல் கார்களை இயக்க மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறுவோருக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. அவசர கால சேவை, அரசு அல்லது தேர்தல் பணிக்கான வாகனங்கள் தவிர்த்து மற்ற பிஎஸ் 3,4 ரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |