கார் மீது லாரி மோதிய விபத்தில் தம்பதியினர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் நடேசன் நகர் பகுதியில் சங்கரன்-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காரில் சென்னையில் இருந்து காரைக்குடி நோக்கி சென்றுள்ளனர். இதனையடுத்து மீண்டும் தம்பதியினர் காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாரம் மெயின் ரோட்டில் சென்ற போது திடீரென சாலையின் குறுக்கே வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது.
இந்த விபத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சங்கரன், லட்சுமி தம்பதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் லாரி ஓட்டுநர் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.