தும்மியதால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கித்வாய் நகரில் ஜுபைர் என்ற வாலிபர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென தும்மல் வந்துள்ளது. அதனால் அவர் நடந்தபடியே தும்மியுள்ளார். இந்நிலையில் ஜுபைர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் ஜுபைரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்கள் அவர் தும்மலை தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கூறியுள்ளனர். இந்நிலையில் ஜுபைர் மயங்கி கீழே விழுந்த வீடியோ அதே பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.