Categories
தேசிய செய்திகள்

வருகிற 2023 ஜனவரி முதல் இரண்டடுக்கு மின்சார பேருந்து சேவை தொடக்கம்…. வெளியானது சூப்பர் அறிவிப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி முதல் 2 அடுக்கு மின்சார பேருந்து சேவை தொடங்கப்பட இருக்கிறது. அதன்படி அடுத்த வருடம் ஜனவரி மாதம் 14-ம் தேதி நகரம் முழுக்க 10 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. அதன்பின் 50 பேர் பேருந்துகளாக எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று மும்பை பிஇஎஸ்டி பொது நிறுவன மேலாளர் லோகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இம்மாதத்தில் மின்சார பேருந்து சேவை தொடங்க எனவும், அடுத்த மாதம்‌ 2 அடுக்கு மின்சார பேருந்து சேவை தொடங்க எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் செல்லும் பயணிகள் முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்குள் 500 மின்சார பேருந்துகளுடன் மின்சார டாக்ஸி சேவையும் தொடங்கும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். மேலும் டாக்ஸி சேவைகளை சலோ செயலி மூலமாகவே வாடிக்கையாளர்கள் புக் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |