வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறபட்டுள்ளதவது, தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வருகிற 6-ம் தேதி மாலை இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தென் வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும். பின் டிசம்பர் 8-ம் தேதி காலை மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகே வந்தடைய கூடும். இந்நிலையில் இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் டிசம்பர் 7-ஆம் தேதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் டிசம்பர் 8-ம் தேதி ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும் ஓரிரு இடங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
வருகிற டிசம்பர் 9-ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, போன்ற மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் மிகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும். அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும். அதனால் மேலே கூறப்பட்டுள்ள நாட்களில் மீனவர்கள் இந்த பகுதி செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.