2023-ம் வருடம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் நல்ல ஏற்றமிருக்கும் என ஊடகஅறிக்கைகள் தெரிவிக்கிறது. ஒரு மதிப்பீட்டின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 -5 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும். மார்ச் 2023ல் மீண்டுமாக அகவிலைப்படியை உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது. இந்த உயர்வின் படி ஊழியர்களின் அகவிலைப்படி 43 சதவீதமாக அதிகரிக்கும்.
இதனால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி உயர்வு 42 சதவீதத்தை எட்டும். இதன் காரணமாக குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் மாதம் ரூபாய்.720 அதிகரிக்கப்படும். அதிகபட்சம் சம்பள வரம்புக்கு, இந்த உயர்வு மாதத்துக்கு ரூ.2276 என்ற விகிதத்தில் இருக்கும்.