ஜி 20 மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
ஜி 20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் 5-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்திய ஏற்க உள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் வெற்றிகரமாக நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. டெல்லியில் நாளை மறுநாள் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜி-20 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முதல் முதலாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி 5-ம் தேதி காலை டெல்லி சென்று ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு அன்றிரவே அவர் சென்னை திரும்ப உள்ளார். மேலும் டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்தித்து பேசுவாரா என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பிரதமர் மோடி அனைத்து கட்சி தலைவர்களையும் வரவேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.