Categories
சினிமா தமிழ் சினிமா

என்னய்யா கிசுகிசுவெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க..! கிண்டலாக பதிவிட்ட பொன்னி நதி பாடலாசிரியர்..!!!

சங்கர் திரைப்படத்திற்கு பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பாடல் எழுதுவதாக தகவல் வெளியானதற்கு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற செப் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் இடம்பெற்ற பொன்னி நதி பாடலும் தேவராளன்  ஆட்டம் பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடலை கவிஞர், பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் எழுதினார். இவர் தற்போது ஷங்கர் இயக்ககும் வேள்பாரி திரைப்படத்திற்கு பாடல் எழுவதாக செய்தி சேனல்களில் வெளியானது. இதை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து என்னையா கிசுகிசுவெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க என கிண்டலாக பதிவிட்டிருக்கின்றார்.

Categories

Tech |