தனது காதலர் யார் என்பதை புகைப்படத்துடன் ஸ்வேதா தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்வேதா பண்டேகர் சந்திரலேகா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் 8 ஆண்டுகளாக ஒளிபரப்பானது. இது சில மாதங்களுக்கு முன்பாக முடிவடைந்தது. இந்த நிலையில் தனது அடுத்த ப்ராஜெக்ட்க்கான கதை குறித்து அறிவிப்பு வெளியீடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வந்த நிலையில் அதற்கு மாறாக இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.
தனது காதல் குறித்த அப்டேட் கொடுத்திருந்தார் ஸ்வேதா. அவர் தனது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து என் இதயம் நீண்ட நாட்களுக்கு முன் தொலைந்து போனது. அதை தற்போது கண்டுபிடித்து விட்டேன் என்பதை பதிவிட்டிருந்தார். ஆனால் அப்புகைப்படத்தில் ஸ்வேதாவின் காதலர் பின்னால் திரும்பி நின்று கொண்டிருந்தார். இதனால் அவர் யார் என தெரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் ரசிகர்கள் யார் யார் என கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் அவர் தனது காதலர் யார் என்பதை புகைப்படத்தின் மூலம் தெரிவித்துள்ளார். அவரின் காதலர் வீஜேவும் நடிகருமான மால் முருகன் தான். அவர் வெளியிட்ட புகைப்படத்தில் இருவரின் புகைப்படத்துடன் வருகின்ற டிசம்பர் 4-ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக செய்தியும் வெளியாகி இருக்கின்றது. இதை அறிந்த ரசிகர்கள் மீண்டும் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். மேலும் திருமணத்திற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்கள்.