தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசின் பல நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அரசு அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டால் அவை உடனடியாக இடித்து அகற்றப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். மேலும் கட்டிடங்கள் கட்டுவதற்கு வரைபட அனுமதி மிக முக்கியம் எனவும் அவை இல்லாமல் எந்த ஒரு கட்டிடமும் கட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது பொறியாளர்களின் பொறுப்பு. கட்டிட அனுமதி தேவை என்பது பொதுமக்கள் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. அவற்றை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.