கர்நாடக மாநிலத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் ஹுப்ளி கலகதகி நபரை சேர்ந்த முக்தம் மஹ்மதாஃப்ரி என்ற சிறுவன் அங்குள்ள மான்யாரா அரசு தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுவன் வழக்கம் போல காலையில் பள்ளிக்குச் சென்றுள்ள நிலையில் தனது வகுப்பறையில் உள்ளே நுழைந்தவுடன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அங்கேயே சிறுவன் சுருண்டு விழுந்தான்.
இதனை கண்டு பதறிப் போன ஆசிரியர்கள் உடனே மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிறுவன் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இதனிடையே மாணவன் கடந்த சில நாட்களாக இதயம் தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.