Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கில் ரூ. 1000 பரிசு பணம்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் நியாய விலை கடைகளின் மூலம் நடபாண்டில் பொங்கல் பரிசு தொகுப்பு ரூபாய் 1000 வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த முறை ரொக்க பணத்திற்கு பதிலாக 21 பொருட்கள் அடங்கிய மளிகை சாமான்கள் மட்டும் தான் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட்டது. கடந்த 19-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது பொங்கல் பரிசு தொகையாக ரூபாய் 1000 வழங்குவதற்கும், இலவசமாக வழங்கப்படும் வேட்டி மற்றும் சேலையின் நிறம் மற்றும் டிசைனில் மாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு பணத்தை ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் நேரடியாக நடப்பாண்டில் செலுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனையடுத்து ரேஷன் அட்டை வைத்திருக்கும் 14.60 லட்சம் பேருக்கு வங்கி கணக்கு இல்லாததால் அவர்கள் அனைவருக்கும் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு திறப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசு ரொக்க பணத்துடன் சேர்த்து ஒரு சில மளிகை பொருட்களையும் வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |