ஆல்கஹால், போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி கலாசாரம் ஆகியவற்றை மிகைப்படுத்தி வானொலி நிலையங்கள் பாடல் ஒலிபரப்பக்கூடாது என மத்திய அரசு எச்சரித்து இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் “வானொலி நிலையங்கள் கிராண்ட் ஆஃப் பர்மிசன் ஒப்பந்தம் மற்றும் புலம்பெயர் கிராண்ட் ஆஃப் பர்மிசன் ஒப்பந்தத்தில் கூறியுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் கண்டிப்பாக செயல்படவேண்டும்.
இந்த ஒப்பந்தங்களின் படி வன்முறை இடம்பெறும் எந்தவொரு விஷயத்தையும் வானொலியில் ஒலிபரப்பக்கூடாது. இதை மீறினால் அந்த வானொலி நிலையங்கள் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று கூறப்பட்டு உள்ளது. வானொலி நிலையங்களில் ஆல்கஹால், போதைப்பொருள்கள், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி கலாசாரம் ஆகியவற்றை மிகைப்படுத்தி பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டதை அடுத்து இந்த எச்சரிக்கையினை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.