சேலம் மாவட்டத்தில் வட மாநில நபர் குடும்பத்துடன் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் கொலை செய்யப்பட்டனர் , இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆக்ராவை சேர்ந்தவர் ஆகாஷ், அவரது மனைவி வந்தனா, ஆகாஷின் அண்ணன் மகன் சன்னி இவர்கள் மூவரும் சேலத்தில் உள்ள வெள்ளிப்பட்டறை ஒன்றில் ஒரு வாரத்திற்கு முன் வேலைக்கு சேர்ந்தனர்.
இவர்களின் வீட்டில் இரவு நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டிருக்கிறது. இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது ஆகாஷ், அவரது மனைவி மற்றும் அண்ணன் மகன் ஆகியோர் பிணமாக கிடந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை மேற்கொண்ட விசாரணையில், ஆக்ராவை சேர்ந்த வினோத், தினேஷ், சுராஜ், விஜி ஆகியோர் ஆகாஷ் வேலை செய்த அதே வெள்ளிப் பட்டறையில் வேலை செய்து வந்ததாகவும், ஆகாஷ் குடியிருந்த வீட்டின் அருகே இவர்களும் தங்கியிருந்ததாகவும்,இதனை அடுத்து இவர்கள் தலைமறைவானதும் தெரியவந்தது. தலைமறைவான இந்த 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.