தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரும் நடிகர் நாக சைதன்யாவும் 7 வருடங்கள் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் கடந்த வருடம் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறித்து நடிகர் நாகசைதன்யா ஒரு பேட்டியில் கூறியது தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, சுமார் 10 வருடங்களுக்கு முன்பாக நானும் சமந்தாவும் ஒரு படப்பிடிப்பில் சந்தித்துக் கொண்டோம்.
அதன் பிறகு 7 வருடங்களாக நான் சமந்தாவை இம்ப்ரஸ் செய்வதற்கு முயற்சி செய்தேன். அவரை திருமணம் செய்து கொள்வதை தவிர வேறு வழியே எனக்கு கிடையாது என்று கூறினார். அதற்கு சமந்தா நாக சைதன்யா பல பெண்களின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தார். அவருக்கு 7 வருடங்களுக்கு பிறகு தான் என்னுடைய டோக்கன் கிடைத்தது என்று கிண்டலாக கூறினார். இந்த பேட்டி தற்போது வலைதளத்தில் திடீரென வைரலாகிறது.
நடிகர் நாகசைதன்யா மற்றும் சோபிதா அண்மையில் சேர்ந்து எடுத்த புகைப்படம் வலைதளத்தில் வெளியான நிலையில், சமந்தாவின் ரசிகர்கள் நாகசைதன்யாவை விளாசி வருகிறார்கள். மேலும் நோயினால் அவதிப்பட்டு வரும் நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விரைவில் இணைந்து வாழ போவதாக தகவல்கள் வெளியான நிலையில், நாக சைதன்யா மற்றும் சோபிதா இணைந்து எடுத்த புகைப்படம் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.