Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கொடைக்கானலுக்கு இன்ப சுற்றுலா”…. வேன் கவிழ்ந்து 8 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள சோட்டானிக்கரை பகுதியை சேர்ந்த 13 பேர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு ஒரு வேனில் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த வேனை என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.vஅவர்கள் கொடைக்கானலில் இருக்கும் பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்துவிட்டு மோர்பாயிண்ட் பகுதிக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்குள்ள வளைவில் திரும்ப முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 8 பேர் காயமடைந்தனர். ஓட்டுனர் உட்பட 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |