Categories
மாநில செய்திகள்

“100% உறுதி”…. பிற்பகல் 2:00 முதல் இரவு 8:00 மணி வரை மது விற்பனை”…. தமிழக அரசிடம் கோர்ட் சரமாரி கேள்வி….!!!!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மற்றும் மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே ரமேஷ் ஆகியோர் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் தமிழகத்தில் மதுபானங்கள் விற்பனை செய்யும் நேரத்தை குறைக்க வேண்டும் எனவும், பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தது. அப்போது வழக்கு விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் மதுபான கடைகளில் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி நேரமாக குறைக்க கூடாதா என்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்பினர்.

அதன் பிறகு பள்ளி மாணவர்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்வதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அரசுக்கு அறிவுறுத்தினர். இந்நிலையில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழகத்தில் மட்டும் தான் பிற பகுதிகளை ஒப்பிடும்போது குறைவான நேரத்திற்கு மது விற்பனை செய்யப்படுகிறது எனவும், 21 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மது குடிப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார். அப்போது நீதிபதிகள் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் மது விற்பனையின் மூலம் அதிக அளவு வருமானம் கிடைக்கிறது  என்று கூறினார்கள்.

அதோடு பள்ளி மாணவர்களுக்கு 100% அது விற்பனை செய்யப்படுவதில்லை என்பதை உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா என்றும், 21 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மது குடிக்கவில்லை என்பதையும் உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். மேலும் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மது குடிப்பதை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை தமிழக அரசு கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டதோடு, வழக்கை டிசம்பர் 1-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Categories

Tech |