Categories
மாநில செய்திகள்

20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்..!!

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை..

இன்று காலை புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, மாலை 3 மணியிலிருந்து 4 மணிக்குள் இலங்கை பகுதியான காரைநகர் தென்கிழக்கே கோவளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி மீன்பிடித்ததாக குற்றம் சுமத்தி 4 படகுகளில் இருந்த 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்துள்ளனர். இவர்களை காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்வதாக அங்குள்ள மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படை கைது செய்த தகவலை அங்குள்ள மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். எனவே மாலை 6 மணி அளவில் காரைநகர் கடற்படை முகாமிற்கு இவர்களை அழைத்து செல்லலாம்.. இவர்கள் அனைவரும் தமிழக மீனவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவில்லை..

Categories

Tech |