தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து புது படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில்ராஜூ தயாரிக்கிறார். ஆர்.சி.15 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.
Excited about this !!
Looking forward to working with @BuchiBabuSana & the entire team.@vriddhicinemas @SukumarWritings #VenkataSatishKilaru @MythriOfficial pic.twitter.com/hXuI5phc7L
— Ram Charan (@AlwaysRamCharan) November 28, 2022
அதன்பின் ராம் சரண் டிரைக்டர் புச்சிபாபு சனா இயக்கத்தில் புது படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை டிரைக்டர் புச்சிபாபு சனா எழுதி இயக்குகிறார். இதை நடிகர் ராம் சரண் தன் சமூகவலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்து உள்ளார். தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி கவனம் பெற்ற “உப்பென்னா” திரைப்படத்தை இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.