குயின்ஸ்லாந்தில் உள்ள கிரிஃப்பித் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் மற்றும் தொற்று நோய் துறைத் தலைவர் லாரா ஹெர்ரெரோ தலைமையில் நடந்து வரும் ஆராய்ச்சி, கொரோனாவை ஒழிக்கும் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மருந்து தொடர்பானது ஆகும். மிக கொடூரமான உயிர்க் கொல்லியாக இருக்கும் கொரோனாவை ஒழிப்பதற்கான மருந்தை நீங்கள் வீட்டுக்கும் எடுத்துச்சென்று பயன்படுத்தி குணமடையும் அடிப்படையிலான மருந்துகள் இருக்கிறதாம்.
எனினும் அதிலும் மிக சிறப்பான மருந்து தொடர்பான ஆராய்ச்சி இப்போது நடைபெற்று வருகிறது. அதாவது உடலுக்குள் புகுந்த முதல் படியிலேயே கொரோனாவை ஒழிக்கும் அடிப்படையிலான மருந்தை அவர்கள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். மூக்கிலுள்ள உயிர் அணுக்களை கொரோனா வைரஸ்கள் தாக்குவதை தடுத்து, அதன் வாயிலாக அவை உடலுக்குள் உள்நுழைவதையும் தடுக்கும் விதமாக நாசல் ஸ்ப்ரே எனப்படும் மூக்கில் தெளிக்கும் மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி நடந்து வருகிறது.
ஒட்டு மொத்தமாக கொரோனாவை கொல்லும் ஆயுதமாக மாறாவிட்டாலும், பாதுகாப்பானதாகவும், பக்கவிளைவுகள் இல்லாததாகவும் உறுதிசெய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு மூக்கு வழியே செலுத்தும் மருந்துகள், கண்டிப்பாக கொரோனாவுக்கு எதிரான மனித குலத்தின் போரில் ஒரு மிகச்சிறந்த கருவியாக மாறலாம் என கணிக்கப்படுகிறது.