சென்னை வந்த இரயில்வே ஊழியருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் , ஓமனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனால் தமிழகத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கையை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது.
தமிழக முதல்வர் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டமும் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேபாளத்தில் இருந்து சென்னை திரும்பிய ரயில்வே ஊழியர் ஒருவர் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. சென்னை எழும்பூர்ரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் ரயில்வே ஊழியர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.