அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது கூறியதாவது, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு விரைவில் தளர்வு அளிக்கப்படும். அறுவை சிகிச்சை செய்யப்படுபவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
கொரோனா பாதிப்பானது சீனாவில் தொடர்ச்சியாக இருந்து வந்தாலும் இந்தியாவில் பாதிப்பு இல்லை. அதனால் சர்வதேச விமான நிலையங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றது. மேலும் வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைகளுக்கு காப்பீடு பணம் சென்று சேர்வதில் சிக்கல் இல்லாமல் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.