நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரண்டு பேரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து நான்கு மாதங்களே ஆன நிலையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர். இது பல சர்ச்சைகளுக்கு ஆளானது. இருப்பினும் சட்டங்களை முறையாக பின்பற்றி தான் குழந்தை பெற்றெடுத்ததாக விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில் நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவனின் தாயார் பெருமிதமாக பேசியுள்ளார். நயன் வீட்டில் வேலை பார்க்கும் பணியாளர் ஒருநாள் சோகமாக இருந்துள்ளார். அவருக்கு கடன் பிரச்சனை இருப்பதை அறிந்த நயன், 4 லட்சம் கொடுத்து உதவியதாக விக்கியின் தாய் தெரிவித்துள்ளார்.