டிராக்டர் விபத்தில் பலியான சிறுவனின் குடும்பத்திற்கு ரூபாய் 6 லட்சம் நிவாரணம் வழங்கினார் தென்காசி எம்எல்ஏ பழனி நாடார்.
தென்காசி மாவட்டம் சுரண்டையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாருக்கு சொந்தமான டிராக்டர் ஒன்று 4 வயது சிறுவன் ராஜாமுகன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன்பரிதாபமாக உயிரிழந்தான். இதனை தொடர்ந்து இன்று காலை சிறுவன் உடல் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பாக பெற்றோர்கள், உறவினர்கள் சட்டமன்ற உறுப்பினர் நேரில் வந்து பார்த்த பிறகு தங்களது மகன் உடலை உடற்கூறு செய்ய அனுமதிப்போம் என தெரிவித்து இருந்தனர்..
அதனடிப்படையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் நேரில் வந்து பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்பு சிறுவன் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து அவரது உடலை பார்த்துவிட்டு மாலை அணிவித்துவிட்டு அஞ்சலி செலுத்தினார். பின் அவரது குடும்பத்திற்கு 6 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்கியுள்ளார். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை பெற்று தர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.