கர்நாடக மாநிலத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவும் வகையில் சமூக நலத்துறை அமைச்சர் கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி புதிய திட்டம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொரு தொகுதியிலும் 100 இரு சக்கர வாகனங்களை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில முழுவதும் 28 ஆயிரம் வேலையில்லா இளைஞர்களுக்கு இரு சக்கர வாகனத்தை வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கு வேலையில்லா தாழ்த்தப்பட்ட ஜாதி மற்றும் பழங்குடியின இளைஞர்கள் சேவா சிந்து போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டம் மூலமாக இரு சக்கர வாகனத்திற்கு அரசு சார்பாக 50000 வழங்கப்படும் எனவும் வங்கி மூலமாக 20 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தி வேலையில்லா இளைஞர்கள் மீன்பிடித்தல்,காய்கறிகள் மற்றும் ஆடைகள் ஆகியவற்றை விற்பதற்கு சுயதொழில் புரிவதற்கு பயன்படுத்திக் கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.