Categories
தேசிய செய்திகள்

மொழிக்கு மதம் என்பது கிடையாது!… நிரூபித்து காட்டி முதல் பரிசை வென்ற பள்ளி மாணவி…. குவியும் வாழ்த்துக்கள்…..!!!!

கேரளா கோழிக்கோடு மாவட்டத்தில் தொட்டானூர் துணை மாவட்ட அளவிலான கலை திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவற்றில் செம்மரத்தூர் எல்.பி. பள்ளியை சேர்ந்த பார்வதி என்ற 4ஆம் வகுப்பு மாணவி குரான் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்றார். இதையடுத்து மேடையில் அனைவர் முன்னிலையிலும் பார்வதி குரானை ஒப்புவித்து ஏ கிரேடு உடன் முதல் பரிசை பெற்றார்.

இந்து மாணவியான இவர் அரபி மொழியில் அடுக்கடுக்காக பேசியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மேலும் இவரது இரட்டை சகோதரியான பர்வானாவும் அரபிமொழியில் சிறந்து திகழ்கிறார். அவர்கள் இரண்டு பேரும் பள்ளி ஆசிரியை ருகாயாவிடம் இருந்து அரபியை கற்று உள்ளனர். மாணவி பார்வதியின் தந்தை நலீஷ்பாபி ஆவார்.

இதில் நலீஷ்பாபி கோழிக்கோட்டில் ஐ.டி. ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அதேபோல் தாயார் டினா பிரபா ஆங்கில பேராசிரியை ஆவார். ஒரு புது மொழியை கற்பது முக்கியம் என்றும் அது அவர்களை ஊக்குவிக்கும் என்றும் பார்வதியின் பெற்றோர் நினைத்து இருக்கின்றனர். ஆகவே மொழிக்கு மதம் என்பது கிடையாது என மாணவி பார்வதி நிரூபித்துவிட்டாள் என அவரது பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர். இதனால் பார்வதிக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Categories

Tech |