Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யும் நிறுவனங்கள்….. மாநிலம் முழுவதும் 40 இடங்களில் அதிரடி ரெய்டு…..!!!!!

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவைகள் சப்ளை செய்யும் 2 நிறுவனங்கள் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையானது வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மண்ணடியில் உள்ள அருணாச்சலம் இன்பேக்ஸ், தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி குரூப் ஆஃப் கம்பெனிஸ் மற்றும் இண்டர் கிரேடட் சர்வீசஸ் குரூப் போன்ற நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனங்களுக்கு தொடர்புடைய 40 இடங்களில் மாநிலம் முழுவதும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சோதனையினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மத்தியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |