பிரபல நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அதிக அளவில் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
பிரபல நாடான இந்தோனேசியாவில் உள்ள சியாஞ்சூர் நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர் . இதில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு வருகிறது. இதுவரை மொத்தம் 252 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தேசிய தேடுதல் மற்றும் மீட்பு கழகத்தின் தலைவர் கூறியதாவது.
பாதிக்கப்பட்ட பகுதி சிதறி கிடக்கிறது. இந்நிலையில் கிராமங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளது. இதனால் மீட்பு பணி மிகவும் சவாலாக உள்ளது. இதுவரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்ததில் பெரும்பாலானது குழந்தைகள். ஏனென்றால் அவர்கள் மதியம் 1 மணி அளவில் பள்ளிக்கூடங்களில் இருந்துள்ளனர். இதனால் பல்வேறு நகரங்களில் மின்சாரங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.