Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. அலறி அடித்துக் கொண்டு ஓடிய மக்கள்….!!!!

பிரபல நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பிரபல நாடான இந்தோனேசியா நெருப்பு வளையம் என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த நாடு புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது. இதனால் இங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. மேலும் இந்த நிலநடுக்கங்கள் சில நேரங்களில் பயங்கரமாக ஏற்பட்டு அதில் ஏராளமான மக்கள் உயிரிழந்தும் உள்ளனர். இந்த நிலையில் தெற்கு மலாங்கோ பகுதியில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது  அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் என பல கட்டிடங்கள் குலுங்கி உள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு தெரு வீதிகளிலும், மைதானங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |