உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மத்திய-மாநில அரசுகளானது பல்வேறு திட்டங்களை கொண்டுவந்திருக்கிறது. அந்த திட்டங்கள் குறித்து இங்கே நாம் தெரிந்துகொள்வோம்.
சுகன்யா சம்ரிதி யோஜனா
பெண் குழந்தைகளின் உயர் கல்வித் தேவைகளை பூர்த்திசெய்யும் அடிப்படையில் மத்திய அரசின் ஆதரவுடன் இயங்கிவரும் சிறு சேமிப்புத் திட்டங்களில் ஒன்றுதான் சுகன்யா சம்ரித்தி யோஜனா. சென்ற 2015ம் வருடம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் இத்திட்டத்தில், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம். இதில் குறைந்தப்பட்ச தொகையாக ரூபாய். 250 -ரூ.1.5 லட்சம் வரை வைப்பு நிதியை செலுத்தமுடியும். இந்த திட்டத்தின் முதிர்வுகாலம் 21 வருடங்கள் (அ) குழந்தைகள் 18 வயதை எட்டியவுடன் இந்த பணத்தை நீங்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இதற்கு 7.6% வட்டிவிகிதம் கிடைப்பதால் கண்டிப்பாக குழந்தைகளின் எதிர்காலத்துக்கான பாதுகாப்பு திட்டமாக அமைகிறது.
பாலிகா சம்ரிதி யோஜனா